sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கவச உடை அணிந்து புலியை தேடும் பணி

/

கவச உடை அணிந்து புலியை தேடும் பணி

கவச உடை அணிந்து புலியை தேடும் பணி

கவச உடை அணிந்து புலியை தேடும் பணி


ADDED : ஆக 11, 2025 08:40 PM

Google News

ADDED : ஆக 11, 2025 08:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் அருகே பசு மாடுகளை தாக்கி கொன்ற புலியை வன ஊழியர்கள் கவச உடை அணிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கூடலுார் தேவர்சோலை பாடந்துறை சுற்றுவட்டார பகுதியில் உலா வரும், 3 வயது ஆண் புலி கடந்த சில மாதங்களில், 20 மாடுகளை தாக்கி கொன்றது. கடந்த, 8ம் தேதி முதல் அப்பகுதியில் கூண்டு வைத்து அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இப்பணியில், 35 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நான்கு இடங்களில் கூண்டுகள் வைத்துள்ளனர். 30 தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

எனினும், புலி இதுவரை கூண்டில் சிக்கவில்லை. இந்நிலையில், 4ம் நாளான நேற்று வன ஊழியர்கள், கவச உடை அணிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'மாடுகளை தாக்கி கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம்.

இதுவரை புலி சிக்கவில்லை. தற்போது புலி நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் பகுதியில், வன ஊழியர்கள் கவச உடையில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விரைவில் புலி கூண்டில் சிக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us