sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு; 16 முதல் 19ம் தேதி வரை இயங்கும் சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு

/

மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு; 16 முதல் 19ம் தேதி வரை இயங்கும் சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு

மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு; 16 முதல் 19ம் தேதி வரை இயங்கும் சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு

மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு; 16 முதல் 19ம் தேதி வரை இயங்கும் சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு


ADDED : ஜன 12, 2025 10:57 PM

Google News

ADDED : ஜன 12, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, மலை ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலைரயிலில் பயணம் செய்ய, அதிக ஆர்வம் கட்டி வருகின்றனர். தற்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு புறப்படும் ரயில், குன்னுார் வந்து பின், 12:00 மணிக்கு ஊட்டியை சென்றடையும். மலை ரயிலில் முன்பதிவு செய்து சுற்றுலா பயணிகள் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், தற்போது பொங்கல் விடுமுறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் காத்திருந்து மலை ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

அதில், குன்னுார்- ஊட்டி ரயில்களிலும் கூட்டம் நிரம்பி விடுகிறது.

பொங்கல் விடுமுறைக்காக வரும், 16 முதல் 19ம் தேதி வரை, 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம்- -ஊட்டி இடையே, 16 முதல் 19ம் தேதி வரை, 4 நாட்கள் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நாட்களில், ஊட்டி- கேத்தி இடையே காலை, 9:45 மணி; காலை 11: 35 மணி; மாலை 3:00 மணி இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us