sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புதிய பாலத்தில் போக்குவரத்து சுற்றுலா பயணிகள் நிம்மதி

/

புதிய பாலத்தில் போக்குவரத்து சுற்றுலா பயணிகள் நிம்மதி

புதிய பாலத்தில் போக்குவரத்து சுற்றுலா பயணிகள் நிம்மதி

புதிய பாலத்தில் போக்குவரத்து சுற்றுலா பயணிகள் நிம்மதி


ADDED : மார் 20, 2024 01:20 AM

Google News

ADDED : மார் 20, 2024 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;மேல் கூடலுார், ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பாலத்தில் போக்குவரத்து துவங்கப்பட்டதால், ஓட்டுனர்கள், நிம்மதி அடைந்துள்ளனர்.

கூடலுார் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், மேல் கூடலுார் அருகே குறுகிய பாலத்தை உடைத்து புதிய பாலம் கட்டும்பணி, கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.

அக்., மாதம் சாலையை ஒட்டி புதிய பாலம் அமைக்கும் பணிக்காக, பொக்லைன் மூலம் மண் அகற்றும் பணியின் போது, மண் சரிவு ஏற்பட்டு, சாலை சேதமடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதனால், நீலகிரி, கேரளா, கர்நாடாக இடையே இயக்கப்படும் வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டன. பயணிகள், ஓட்டுனர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தேசிய நெடுஞ்சாலை துறையினர் விரைந்து செயல்பட்டு, 15 மணி நேரத்தில் தற்காலிக பாலம் அமைத்து போக்குவரத்து சீரமைத்தனர்.

புதிய பாலம் கட்டும் பணி கடந்த மாதம் நிறைவு பெற்றது. கடந்த வாரம் பாலத்தை ஒட்டிய சாலை சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

இதனால் ஓட்டுநர்கள் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us