sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வாட்டர் பாட்டில் இருந்தால் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

/

வாட்டர் பாட்டில் இருந்தால் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

வாட்டர் பாட்டில் இருந்தால் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

வாட்டர் பாட்டில் இருந்தால் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்


ADDED : ஜூலை 06, 2025 11:37 PM

Google News

ADDED : ஜூலை 06, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; நீலகிரி மாவட்டம் முழுவதும் 19 வகையிலான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது. மேலும் 1 லிட்டர், 2 லிட்டர் போன்ற சிறிய ரக ஒருமுறை பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்கள் எடுத்து வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு வரும் அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றுக்கு ரூ. 20 அபராதம் விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து சோதனை சாவடி ஊழியர் ஒருவர் கூறுகையில், ''எத்தனை வாட்டர் பாட்டில்கள் உள்ளதோ, அவை அனைத்திற்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு வாட்டர் பாட்டிலுக்கு ரூ. 20 என அபராதம் விதிக்கப்படுகிறது.

அபராதம் விதிக்கப்படுவதால், அடுத்த முறை அவர்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வர மாட்டார்கள்,'' என்றார். இச்சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளின் விழிப்புணர்வுக்காக காட்டெருமை உருவம் கொண்ட பொம்மை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதில் 'வனவிலங்குகளை காப்போம்', பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்' என வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.----






      Dinamalar
      Follow us