/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி
/
தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி
ADDED : ஏப் 30, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் அருவங்காடு பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.
ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதில், அருவங்காடு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பொது கழிப்பிடத்தில் தண்ணீர் இல்லாததால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். சாலையோர பகுதிகளில் அசுத்தம் செய்கின்றனர்.
எனவே, ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.