sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ரயிலில் இருந்து விழுந்த வியாபாரி படுகாயம்

/

ரயிலில் இருந்து விழுந்த வியாபாரி படுகாயம்

ரயிலில் இருந்து விழுந்த வியாபாரி படுகாயம்

ரயிலில் இருந்து விழுந்த வியாபாரி படுகாயம்


ADDED : மே 01, 2025 04:40 AM

Google News

ADDED : மே 01, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : பாலக்காடு அருகே, ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த வியாபாரி படுகாயமடைந்தார்.

ஆந்திர மாநிலம், நெல்லுார் பகுதியை சேர்ந்தவர் மது, 36, கால்நடை வியாபாரியான இவர், நேற்று முன்தினம் காலை பாலக்காடு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் இருந்து ஊருக்கு ரயிலில் சென்றார்.

அப்போது, வாளையார் அருகே இரவு, 11:30 மணிக்கு ரயில் சென்ற போது, முகம் கழுவுவதற்காக கதவு பக்கம் சென்றார். திடீரென கால் தடுமாறியதில், திறந்திருந்த கதவு வழியாக, ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதை கண்ட சக பயணியர், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரயில்வே போலீசாரும், வாளையார் போலீசாரும் விரைந்து வந்து, அவரை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலை மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக தண்டவாளத்துக்கு வெளிப்பகுதியில் விழுந்ததால் உயிர்தப்பினார்.






      Dinamalar
      Follow us