sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ரூ.20.74 லட்சம் வாடகை பாக்கி வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு 'சீல்'

/

ரூ.20.74 லட்சம் வாடகை பாக்கி வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு 'சீல்'

ரூ.20.74 லட்சம் வாடகை பாக்கி வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு 'சீல்'

ரூ.20.74 லட்சம் வாடகை பாக்கி வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு 'சீல்'


ADDED : ஜன 23, 2025 11:17 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார், ; குன்னுார் மார்க்கெட்டில், 20.74 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்த, மார்க்கெட் வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

குன்னுார் மார்க்கெட் கடைகளுக்கு, நகராட்சி வாடகை வசூலித்து வருகிறது. பல கடைகள் உள் வாடகை விடப்பட்டு இருந்த நிலையில், பல ஆண்டுகளாக வாடகையும் உயர்வு செய்யப்படாமல் இருந்தது.

கடந்த தேர்தலின்போது, 'மார்க்கெட் கடை வாடகை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்,' என, வாக்குறுதி அளித்து, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது. அதன்பின், வாடகை உயர்வு செய்யப்பட்டதுடன், '2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மறு மதிப்பீடு செய்த வாடகை நிலுவை தொகை மற்றும் 2019முதல் 2022 வரையில், 3 ஆண்டுகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்வு செலுத்த வேண்டும்,' என, உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து, தொகையை வசூலிக்க நகராட்சி தீவிரம் காட்டி 'சீல்' வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. அதில், பல லட்சம் பாக்கி வைத்த வியாபாரிகள் சங்க அலுவலகத்திற்கு சீல் வைக்காமல் மற்ற கடைகளுக்கு மட்டுமே சீல் வைக்க அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.

இந்நிலையில், 20 லட்சத்து 74 ஆயிரத்து 414 ரூபாய் வாடகை பாக்கி வைத்திருந்த மார்க்கெட் வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு, கமிஷனர் இளம்பரிதி உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சையது இப்ராகிம் மற்றும் ஊழியர்கள், 'சீல்' வைத்து நோட்டீஸ் ஒட்டினர். இதே போல, ஒரு லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்துள்ள மேலும், 3 கடைகளும் சீல் வைக்கப்பட்டன.

அதிகாரிகள் கூறுகையில்,'அதிகபட்சமாக வாடகை பாக்கி வைத்த வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை, 350 கடைகள் வரை வாடகை பாக்கியை செலுத்தியுள்ளன. வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us