sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி

/

தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி

தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி

தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : செப் 21, 2025 10:40 PM

Google News

ADDED : செப் 21, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி மெட்டுக்கல் பழங்குடியினர் கிராமத்தில், தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பில், விவசாயிகளுக்கு 'அட்மா' திட்டத்தின் கீழ், தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாண்மை மேலாளர் பிரசாந்த் வரவேற்றார். கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பரத்குமார் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் பவித்ரா, கால்நடை பராமரிப்பு மற்றும் அதன் அவசியம் குறித்து விளக்கினார். ஊட்டி மண் ஆய்வு கூட வேளாண் அலுவலர் நிர்மலா, மண்ணின் தன்மை, மண் மாதிரி எடுப்பதன் அவசியம் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி மேலாண்மை அலுவலர் மகேஷ், தோட்டக்கலை அலுவலர் கவின் பிரசாத், தோட்டக்கலை அலுவலர் ஐஸ்வர்யா ஆகியோர், அரசின் வேளாண் திட்ட உதவிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.

நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கப்பட்டன. உதவி தோட்டக்கலை அலுவலர் சவுமியா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us