/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலக்கடலையில் அதிக விளைச்சல் பெற பயிற்சி
/
நிலக்கடலையில் அதிக விளைச்சல் பெற பயிற்சி
ADDED : பிப் 08, 2024 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார் : குப்பனுார் ஊராட்சி, அழகேபாளையத்தில், 'அட்மா' திட்டத்தில், விவசாயிகளுக்கு, நிலக்கடலையில், ஒருங்கிணைந்தபயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் லோகநாயகி வரவேற்றார். வேளாண் உதவி இயக்குனர் பிந்து தலைமை வகித்து பேசுகையில், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையை கடைப்பிடித்தால் நிலக்கடலையில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாமல் அதிக விளைச்சல் பெற முடியும், என்றார்.
ஓய்வு பெற்ற துணை வேளாண் இயக்குனர் மோகன்ராஜ் சாமுவேல், நிலக்கடலை பயிரில் பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து பேசினார்.

