sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோத்தகிரியில் மரம் விழுந்து வளைந்த மின் கம்பம்

/

கோத்தகிரியில் மரம் விழுந்து வளைந்த மின் கம்பம்

கோத்தகிரியில் மரம் விழுந்து வளைந்த மின் கம்பம்

கோத்தகிரியில் மரம் விழுந்து வளைந்த மின் கம்பம்


ADDED : மே 30, 2025 11:18 PM

Google News

ADDED : மே 30, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி : கோத்தகிரி அரசு போக்குவரத்து கழக கிளை முன்பு மரம் விழுந்ததில், மின்கம்பம் வளைந்தது.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை குறைந்து இருந்தாலும், அவ்வப்போது சாரல் மழையுடன், பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், பல பகுதிகளில் மரங்கள் விழுந்து வருகின்றன.

இந்நிலையில், கோத்தகிரி கட்டபெட்டு இடையே, ஒரசோலை பகுதிக்கு சமீபத்தில் மாற்றப்பட்ட அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகம் அருகே, பிரதான சாலையில் நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்றில் மரம் விழுந்தது.

உயிரழுத்த மின் கம்பி மேல் மரம் விழுந்ததால், மின் ஒயர்கள் அறுந்து விழுந்ததில், மின் கம்பம் வளைந்து சாய்ந்தது. இதனால், ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில், ஆட்கள் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்துறை ஊழியர்கள், விரைந்து வந்து, அறுந்து விழுந்த வயர்களை மாற்றிய பின், மின் தடை நீங்கியது. இப்பகுதியில் உள்ள அபாய மரங்களை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us