/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவர் காயம்
/
காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவர் காயம்
ADDED : செப் 14, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; முதுமலை தெப்பக்காடு அருகே அதிகாலையில், காட்டு யானை தாக்கி முதியவர் காயமடைந்தார்.
முதுமலை, தெப்பக்காடு தெக்குப்பாடியில் வசித்து வருபவர் மதன்குமார், 80. இவர் நேற்று, அதிகாலை வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த காட்டு யானை அவரை தாக்கியது. அவரின், அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியினர் யானையை விரட்டினர். அவர். சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். வன ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து, கார்க்குடி வனச்சரகர் பாலாஜி மற்றும் வன ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டனர்.