ADDED : மார் 04, 2026 05:51 AM

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் மூசாரிபரம்பு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மனைவி குமாரி, 60. இவர், நேற்று காலை வீட்டில் இருந்து சித்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதி வழியாக நடந்து சென்றார்.
அவ்வழியாக பைக்கில் வந்த இருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த, ஒரு சவரன் தங்கச் செயினை பறித்து கொண்டு அதிவேகமாக சென்றனர். இதை பின்னால் பைக்கில் வந்த நபர் கண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சித்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
புதுநகரம் எஸ்.ஐ., திவாகரன் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், பெருவெம்பு பகுதியில் சந்தேகிக்கும் வகையில் இருந்த நபர்களிடம்நடத்திய விசாரணையில், மூதாட்டியிடம் செயினை பறித்த தமிழகம் திருச்சியை சேர்ந்த, ராஜ்குமார், 26, தர்மராஜ், 30, என்பது தெரிந்தது. அவர்களிடமிருந்து செயினை பறிமுதல் செய்து, இருவரையும் சித்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

