sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தகராறில் ஈடுபட்டு வழிப்பறி; அருவங்காட்டில் இருவர் கைது

/

தகராறில் ஈடுபட்டு வழிப்பறி; அருவங்காட்டில் இருவர் கைது

தகராறில் ஈடுபட்டு வழிப்பறி; அருவங்காட்டில் இருவர் கைது

தகராறில் ஈடுபட்டு வழிப்பறி; அருவங்காட்டில் இருவர் கைது


ADDED : ஜன 31, 2025 11:05 PM

Google News

ADDED : ஜன 31, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் அருவங்காட்டில் பணி முடித்து வந்தவரிடம் தகராறு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

குன்னுார் கேத்தி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி முடித்து உமேஷ்,37, என்பவர் இரவு, 11:00 வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, அருவங்காட்டில் இருந்து வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு, ஒசட்டி செல்லும் நடைபாதை வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த சிலர் குடிபோதையில் இவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கி, 350 ரூபாய் வழிப்பறி செய்தனர். சப்தமிட்டு அருகில் இருந்த மக்கள் வந்து ஒருவரை மட்டுமே பிடித்தனர்.

இது தொடர்பாக, 100 எண்ணில் புகார் அளித்ததன் அடிப்படையில், நீலகிரி எஸ்.பி., நிஷா, டி.எஸ்.பி, முத்தரசு மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தி, இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us