/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை மாத்திரையுடன் பாலக்காட்டில் இருவர் கைது
/
போதை மாத்திரையுடன் பாலக்காட்டில் இருவர் கைது
ADDED : ஜூலை 21, 2025 08:57 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, போதை மாத்திரை உடன் பஸ்சில் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாளையாரில் இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையிலான போலீசார், வாகன சோதனை நடத்தினர். அப்போது, கோவை பகுதியில் இருந்து, கொச்சி நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி பயணியரிடம் சோதனையிட்டனர்.
அப்போது, பாலக்காடு மாவட்டம் செர்ப்புளச்சேரி பகுதியைச் சேர்ந்த ஷம்ஷாத், 27, முகமது ராபி, 23, ஆகியோரின் பையில், 7.31 கிராம் கொண்ட எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு போதை மாத்திரை கடத்தி செல்வது தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.