sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நகர்புற வாழ்வாதார அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 4 லட்சம் பறிமுதல் இரு பெண் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

/

நகர்புற வாழ்வாதார அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 4 லட்சம் பறிமுதல் இரு பெண் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

நகர்புற வாழ்வாதார அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 4 லட்சம் பறிமுதல் இரு பெண் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

நகர்புற வாழ்வாதார அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 4 லட்சம் பறிமுதல் இரு பெண் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


ADDED : செப் 20, 2024 10:34 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் கணக்கில் வராத4 லட்சம் ௹பாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனை அருகில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் சமுதாய ஒருங்கிணைப்பாளராக உள்ள யாமினி, என்பவர் இந்த அலுவலகத்தில் மகளிர் குழுவுக்கு கடன் வழங்கும் பிரிவில் பணியாற்றி வருகிறார். நீலகிரி மாவட்டத்திலுள்ள, 35 மகளிர் குழுக்களுக்கு கூட்டுறவுத்துறை உதவியுடன் தலா , 5 லட்சம் ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டு நேற்று மகளிர் குழுக்களுக்கு காசோலை மற்றும் பணம் வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மகளிர் குழுக்களுக்கு பணம் வழங்கியதற்கு கைமாறாக ஒவ்வொரு குழுவிடம் இருந்து தலா, 42 ஆயிரம் ரூபாயை யாமினி மற்றும் அதே அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பிரேமலதா ஆகியோர் வசூலித்ததாக கூறப்படுகிறது. சுமார் 10 குழுக்களிடம் இருந்து இதுவரை, 4 லட்சம் ரூபாய் வசூலித்ததாக தெரிகிறது.

தகவலின் பேரில் ஊட்டி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ஜெயக்குமார், எஸ்.ஐ., ரங்கநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தி கணக்கில் வராத, 4 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இதுகுறித்து யாமினி, பிரேமலதா ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us