/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவனல்லாவில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட விடுதிகளுக்கு 'சீல்'
/
மாவனல்லாவில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட விடுதிகளுக்கு 'சீல்'
மாவனல்லாவில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட விடுதிகளுக்கு 'சீல்'
மாவனல்லாவில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட விடுதிகளுக்கு 'சீல்'
ADDED : பிப் 26, 2026 05:49 AM

கூடலுார்: மசினகுடி மாவனல்லா பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட, இரண்டு விடுதிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. அதில், மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட, மாவனல்லா பகுதியில், எந்த அனுமதியும் இன்றி இரண்டு விடுதிகள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. நேற்று, கூடலுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியம், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் பொன் இருளப்பன், வி.ஏ.ஓ. ஈஸ்வரன், ஊராட்சி செயலாளர் கிரண் தலைமையிலான குழுவினர், ஆய்வு மேற்கொண்டு, இரண்டு விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள், விதிமீறி செயல்படும் விதிகள் குறித்து ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 'சீல்' வைக்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

