/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீரமைக்காத நடைபாதை; மக்கள் நடமாட சிரமம்
/
சீரமைக்காத நடைபாதை; மக்கள் நடமாட சிரமம்
ADDED : ஜன 06, 2025 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார், 20வது வார்டு, ரேலி காம்பவுண்ட் பகுதியில் உள்ள நடைபாதை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாலையில் நடந்து செல்லும் போது, தவறி விழுந்து காயம் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் விழுகின்றனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடைபாதையை சீரமைக்க வேண்டும்.