sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சீரமைக்காத நடைபாதை; மக்கள் நடமாட சிரமம்

/

சீரமைக்காத நடைபாதை; மக்கள் நடமாட சிரமம்

சீரமைக்காத நடைபாதை; மக்கள் நடமாட சிரமம்

சீரமைக்காத நடைபாதை; மக்கள் நடமாட சிரமம்


ADDED : ஜூன் 10, 2025 09:23 PM

Google News

ADDED : ஜூன் 10, 2025 09:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் உமரி காட்டேஜ் -பரசுராம் தெரு குறுக்கு நடைபாதை படிக்கெட் சீரமைக்காமல் உள்ளதால் மக்கள் நடமாட மிகவும் சிரமப்படுகின்றனர்.

குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 12 வது வார்டு பரசுரம் தெரு பகுதியில் இருந்து உமரி காட்டேஜ் செல்லும், அல்லா பிச்சை லைன் நடைபாதை படிக்கெட், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. தற்போது, இந்த பகுதி முழுவதும் சேதமடைந்து மக்கள் நடமாட முடியாத நிலை ஏட்பட்டுள்ளது.

குறிப்பாக, பள்ளி மாணவ மாணவியர் மற்றும் முதியவர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

தாழ்வான பகுதியிலிருந்து உயரமான இடத்திற்கு செல்லும் இங்கு படிகள் இடிந்துள்ளதால், மழை நீருடன் வெளியேறும் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

இது தொடர்பாக, நகராட்சிக்கு பலமுறை புகார்கள் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை.

இதே போல, குமரன் நகர் பகுதியில் நடைபாதை சீரமைக்காமல் உள்ளதால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

தீர்வு காண கோரி பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us