/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; தாசில்தாரை மாற்ற வலியுறுத்தல்
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; தாசில்தாரை மாற்ற வலியுறுத்தல்
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; தாசில்தாரை மாற்ற வலியுறுத்தல்
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; தாசில்தாரை மாற்ற வலியுறுத்தல்
ADDED : பிப் 07, 2024 10:40 PM

கூடலுார், : கூடலுார் தாசில்தாரை மாற்ற கோரி, கிராம நிர்வாக அலுவலர்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலுார், ஓவேலி பகுதியில், செக் ஷன்-17 அரசு நிலத்தில், புதிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியசோலை பகுதியில், செரீப் என்பவர் கைவசம் நிலத்தில் இருந்த பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் பணியை மேற்கொண்டுள்ளார்.
வருவாய் ஆய்வாளர் கல்பனா, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் அப்பகுதியில் ஆய்வு செய்து, பணியை நிறுத்தும்படி கூறியதுடன், இது தொடர்பான அறிக்கை தாசில்தாரிம் வழங்கி உள்ளனர்.
இந்நிலையில், 'இப்பணியை தடுத்து நிறுத்த உத்தரவு பிறப்பித்தும், அதனை செயல்படுத்தவில்லை' என, கூறி கூடலூர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
இந்த 'நோட்டீசை' நிபந்தனை இன்றி ரத்து செய்யவும்; கூடலுார் தாசில்தார் ராஜேஸ்வரியை மாற்றக்கோரி, கூடலுார், பந்தலுார் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலையை புறக்கணித்து, கூடலுார் தாசில்தார் அலுவலகம் முன்பு காலை, 10:00 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆர்.டி.ஓ., முகமது குதரத்துல்லா, 'பிரச்னை தொடர்பாக பேசி தீர்வு காணப்படும்,' என, உறுதியளித்தார். அதனை ஏற்று, அனைவரும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

