/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டு பதிவு இயந்திரங்கள் சீரற்றமயமாக்கல் பணி
/
ஓட்டு பதிவு இயந்திரங்கள் சீரற்றமயமாக்கல் பணி
ADDED : ஏப் 16, 2026 06:40 PM
ஊட்டி: சட்டசபை பொது தேர்தலை ஒட்டி, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணி, பொது பார்வையாளர்கள் தான்வி சுந்திரியால் (ஊட்டி), ஹரீஷ் (கூடலுார்) மற்றும் சுஹாஸ் (ஊட்டி) ஆகியோர், வேட்பாளர்கள் அல்லது வேட்பாளரால் நியமிக்க பட்ட முகவர்கள் முன்னிலையில் நடந்தது.
அதன்படி, ஊட்டி சட்டசபை தொகுதிக்கு, 304 கட்டுப்பாட்டு கருவிகள், 304 கூட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 330 விவி பேட் இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் நடத்தப்பட்டது.
மேலும், கூடலுார் தொகுதிக்கு, 285 கட்டுப்பாட்டு கருவிகள், 285 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 309 விவி பேட் மற்றும் குன்னூர் தொகுதிக்கு, 292 கட்டுப்பாட்டு கருவிகள், 292 கூட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 317 விவி பேட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, அந்தந்த தொகுதிக்குரிய ஓட்டு சாவடிகளுக்கு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை பிரித்து, மின்னணு ஓட்டு பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு வாயிலாக, ஊட்டி மற்றும் கூடலுார் தொகுதிகளுக்கு, வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்களிலும், குன்னூர் தொகுதிக்கு, செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலும் நடத்தப்பட்டு, ஓட்டுசாவடிகளுக்கான இயந்திரங்கள் பட்டியல் அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

