sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அம்பலமூலாவில் கால்பந்து போட்டி; வெற்றி பெற்ற வயநாடு அணி

/

அம்பலமூலாவில் கால்பந்து போட்டி; வெற்றி பெற்ற வயநாடு அணி

அம்பலமூலாவில் கால்பந்து போட்டி; வெற்றி பெற்ற வயநாடு அணி

அம்பலமூலாவில் கால்பந்து போட்டி; வெற்றி பெற்ற வயநாடு அணி


ADDED : பிப் 17, 2025 10:21 PM

Google News

ADDED : பிப் 17, 2025 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே அம்பலமூலா பகுதியில் செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உறைவிட பள்ளி சார்பில், போதை விழிப்புணர்வு கால்பந்து போட்டி நடந்தது.

'கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கால்பந்து அகாடமி அணி வீரர்கள்,' என, 14- வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த, 11 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா துவக்கி வைத்தார்.

அதில், விளையாடிய மாணவர்கள், தங்கள் திறமையை வெளிக்காட்டியது கால்பந்து ரசிகர்களையும், ஆசிரியர்களையும் கவர்ந்தது. இறுதி போட்டியில் வயநாடு பள்ளி அணியும், எருமாடு பகுதியை சேர்ந்த நீலகிரி மெட்ரிகுலேஷன் பள்ளி அணியும் மோதியதில், வயநாடு அணி வெற்றி பெற்றது.

'வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, பள்ளி ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் செண்பகம், உடற்கல்வி ஆசிரியர் பைஜூ ஆகியோர் தலைமையிலான ஆசிரியர்கள் மற்றும் பங்கேற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us