UPDATED : ஜூலை 19, 2026 03:21 PM
ADDED : ஜூலை 19, 2026 01:00 PM
பந்தலூர்:பந்தலூர் அருள்மிகு ஸ்ரீ முருகன் கோவிலில், மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு முருகனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து, மூன்று குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பூஜைகள் செய்து பின்னர், மாலை மாற்றுதல் முருகன் வள்ளி, தெய்வானைக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் பக்தர்கள் பங்கேற்று மணமக்களான. சுவாமிகளுக்கு மலர் தூவி வணங்கினார்கள். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருமண நிகழ்வுகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் செய்தனர்.
ஏற்பாடுகளை முருகன் கோவில் அறக்கட்டளை தலைவர் ஹரிராமன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ் தலைமையிலான கமிட்டியினர் மற்றும் மகளிர் குழு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
