ADDED : ஜூன் 26, 2026 10:15 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில், 9 மற்றும் 11ம் வகுப்புகளிலும், பிற வகுப்புகளிலும் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்று அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மேள வாத்தியங்களுடன், புதிதாக சேர்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து, பூக்கள் துாவி அழைத்து சென்றனர்.
