sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தெங்குமரஹாடாவில் நலத்திட்ட உதவிகள்

/

தெங்குமரஹாடாவில் நலத்திட்ட உதவிகள்

தெங்குமரஹாடாவில் நலத்திட்ட உதவிகள்

தெங்குமரஹாடாவில் நலத்திட்ட உதவிகள்


ADDED : மார் 03, 2024 11:01 PM

Google News

ADDED : மார் 03, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி;கோத்தகிரி தெங்குமரஹாடா அரசு பள்ளியில், 91 பயனாளிகளுக்கு, 10.96 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், கோத்தகிரி தெங்குமரஹாடா அரசு பள்ளியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று உதவிகளை வழங்கினர்.

அதில், இரண்டு பேருக்கு, ஒரு லட்சம் மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி; 3 பேருக்கு 9 லட்சம் ரூபாய் வங்கி கடன்; வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 7 பயனாளிகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம்; 59 பயனாளிகளுக்கு நிர்வாக அனுமதி சான்றிதழ்; 3 பேருக்கு 23 ஆயிரத்து 700 மதிப்பிலான சக்கர நாற்காலி உட்பட, 91 பயனாளிகளுக்கு, 10.96 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ''பழங்குடியினர் மொழிகளை ஆவணப்படுத்த மாநில முதல்வர், 2 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

தவிர, விடியல் பயணத் திட்டம், மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

பள்ளி கல்வித்துறையில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருவதால், பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்.

இங்கு, 59 பழங்குடியினருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை பெறப்பட்டு, இம்மாதத்திற்குள் பணிகள் துவக்கப்படும்,''என்றார்.

தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. கல்லம்பாளையத்திற்கு அரசு பஸ்சை நீடிப்பு செய்ததுடன், சொட்டு மருந்து முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் அருணா, எஸ்.பி., சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் கவுசிக், ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us