/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'தாட்கோ' திட்டத்தில் 399 பயனாளிகளுக்கு ரூ.5.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி
/
'தாட்கோ' திட்டத்தில் 399 பயனாளிகளுக்கு ரூ.5.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி
'தாட்கோ' திட்டத்தில் 399 பயனாளிகளுக்கு ரூ.5.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி
'தாட்கோ' திட்டத்தில் 399 பயனாளிகளுக்கு ரூ.5.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி
ADDED : பிப் 06, 2025 08:28 PM
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில், 'தாட்கோ' மூலம், 399 பயனாளிகளுக்கு, 5.26 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலம், மாவட்டத்தில், நன்னிலம் மகளிர் நல உடமை திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில், ஐந்து பேருக்கு, 24.50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், 234 நபர்களுக்கு, 1.50 கோடி ரூபாய் மானியம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 88 நபர்களுக்கு, 1.71 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிர் சுய உதவி குழுக்கள் பொருளாதார கடன் உதவி திட்டத்தின் கீழ், 34 நபர்களுக்கு, 92.50 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டு தொழில் முனைவு திட்டத்தின் கீழ், 31 நபர்களுக்கு, 84.50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு முதல் இதுவரை, 399 நபர்களுக்கு, 5.26 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

