/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு வழக்கை எப்போது முடிப்பீர்கள்? கேள்வி எழுப்பிய நீதிபதி
/
கோடநாடு வழக்கை எப்போது முடிப்பீர்கள்? கேள்வி எழுப்பிய நீதிபதி
கோடநாடு வழக்கை எப்போது முடிப்பீர்கள்? கேள்வி எழுப்பிய நீதிபதி
கோடநாடு வழக்கை எப்போது முடிப்பீர்கள்? கேள்வி எழுப்பிய நீதிபதி
ADDED : மார் 07, 2026 02:21 AM

ஊட்டி: 'கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை எப்போது முடிப்பீர்கள்?' என, நீதிபதி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில், நீதிபதி முரளிதரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கேரளாவை சேர்ந்த வாளையார் மனோஜ் மற்றும் சி.பி.சி.ஐ.டி., - ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையிலான போலீசார் நேரில் ஆஜராகினர்.
விசாரணைக்கு பின், அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் கூறுகையில், ''விசாரணையின் போது, 'இந்த வழக்கு தொடர்பாக இதுவரை, 269 சாட்சிகளிடம் விசாரணை நடந்துள்ளது' என, நீதிபதியிடம் தெரிவித்தோம்.
'இவ்வழக்கு எதற்காக இதுவரை நிலுவையில் உள்ளது. எப்போது முடிப்பீர்கள்?' என, புலன் விசாரணை அதிகாரிகளிடம், நீதிபதி கேள்வி எழுப்பினார்.
''அப் போது, 'குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இருந்து ஒரு 'ரிப்போர்ட்' வர வேண்டி உள்ளது. அதனால் தான் வழக்கு நிலுவையில் உள்ளது' என, விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கை ஏப்., 24ம் தேதிக்கு நீதி பதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்,'' என்றார்.

