sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கழுத்தை நெரித்து மனைவி கொலை: கணவன் கைது

/

கழுத்தை நெரித்து மனைவி கொலை: கணவன் கைது

கழுத்தை நெரித்து மனைவி கொலை: கணவன் கைது

கழுத்தை நெரித்து மனைவி கொலை: கணவன் கைது


ADDED : மே 09, 2024 11:27 AM

Google News

ADDED : மே 09, 2024 11:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டியில் கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டார்.

ஊட்டி அருகே ஏக்குணி பகுதியை சேர்ந்த மாணிக்கம், 60, இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர் . கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து சென்றார்.

பின், பங்கஜம் என்ற பெண்ணை திருமணம் செய்த இவருக்கு , 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் தைலம் காய்ச்சும் செட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வேதனை அடைந்த பங்கஜம் குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின் மாணிக்கம் சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலையில் மனைவி கணவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாணிக்கம் மனைவியை துண்டால் கழுத்தை இறுக்கி தலையை தரையில் அடித்ததில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மாணிக்கம் வீட்டிலிருந்து வெளியேறி தலைமறைவானார். வீட்டில் மற்றொரு அறையில் இருந்த தூங்கி கொண்டிருந்த மகள் அம்மாவை தேடியபோது சமையல் அறையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து புது மந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் அல்லி ராணி, எஸ்.ஐ., ஆனந்தராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணிக்கம் அருகில் இருந்த தைல செட்டில் பதுங்கி இருந்ததை கண்டு போலீசார் பிடித்து விசாரணை நடத்திய பின், வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us