sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை

/

மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை

மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை

மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை


ADDED : ஜூலை 07, 2025 12:49 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; நீலகிரி மாவட்டம், குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையே உள்ள வனப்பகுதிகளில், தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. அதில் ஒற்றை காட்டு யானை, மேட்டுப்பாளையம், குன்னுார் இடையே மரப்பாலம் -வடுக தோட்டம் மலை ரயில் பாதை பகுதியில் முகாமிட்டுள்ளது.

நேற்று காலை, 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயில், காலை, 9:30 மணிக்கு வடுக தோட்டம் பகுதிக்கு வந்த போது யானை வழிமறித்தது. உடனடியாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஹாரன் சப்தம் எழுப்பி யானை விரட்ட ரயில்வே ஊழியர்கள் முயற்சித்தனர். எனினும் ரயிலை நோக்கி யானை ஓடி வந்த யானை, திடீரென மலை ஏறியது. மீண்டும் ஹாரன் சப்தம் எழுப்ப அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இந்த சம்பவத்தால், ரயிலில் வந்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். பலரும் 'வீடியோ' மற்றும் புகைப்படம் எடுத்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 10 நிமிடம் தாமதமாக, குன்னுார் நோக்கி மலை ரயில் பாதிப்பின்றி சென்றது.






      Dinamalar
      Follow us