sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூடலுார் அருகே பகலில் ஊருக்குள் முகாமிடும் காட்டு யானை

/

கூடலுார் அருகே பகலில் ஊருக்குள் முகாமிடும் காட்டு யானை

கூடலுார் அருகே பகலில் ஊருக்குள் முகாமிடும் காட்டு யானை

கூடலுார் அருகே பகலில் ஊருக்குள் முகாமிடும் காட்டு யானை


ADDED : மே 19, 2025 08:48 PM

Google News

ADDED : மே 19, 2025 08:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் அருகே, பகலில் ஊருக்குள் முகாமிடும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலூர் பகுதியில் வனத்தை ஒட்டிய கிராமங்களில், இரவு நேரங்களில் காட்டு யானைகள் உணவு தேடி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், சில காட்டு யானைகள், இரவு மட்டுமின்றி பகலிலும் ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கூடலுார் நம்பாலக்கோட்டை பகுதியில், மக்னா யானை முகாமிட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். வனவர் வீரமணி தலைமையில் வன ஊழியர்கள், அப்பகுதியினர் உதவியுடன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் சென்ற யானை, திடீரென திரும்பி அவர்களை விரட்டியது. வன ஊழியர்கள் ஓடி உயிர் தப்பினர். தொடர்ந்து போராடி யானையை விரட்டினர்.

யானை, தேவர்சோலை சாலை கடந்து, தனியார் தேயிலை தோட்டம் வழியாக வனப் பகுதிக்கு சென்றது.

வன ஊழியர்கள் அதனை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மக்கள் கூறுகையில், 'இரவில் ஊருக்குள் வந்து சென்ற காட்டு யானைகள், தற்போது பகலில் வர துவங்கியுள்ளது. எனவே, யானை ஊருக்குள் நுழைவதை தடுத்து, அதனை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us