sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை

/

பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை

பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை

பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை


ADDED : டிச 23, 2024 10:24 PM

Google News

ADDED : டிச 23, 2024 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார், மாக்மூலா பகுதியில் நுழைந்த காட்டு யானை பாக்கு மரங்களை, சேதப்படுத்தியது.

கூடலுார் தொரப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானை, இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து பாக்கு, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர், அதனை கண்காணித்து, விரட்டினாலும், அவைகள் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாக்கமூலா பகுதியில் முகாமிட்ட காட்டு யானை, டேனியல் என்பவர் தோட்டத்தில் நுழைந்து ஏராளமான பாக்கு மரங்களை சாய்ந்து சேதப்படுத்தி, சென்றுள்ளது. இதுகுறித்து விவரம் நேற்று காலை தெரிய வந்தது.

மக்கள் கூறுகையில், 'இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானை, இப்பகுதிக்கு நுழைவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும். மேலும், காட்டு யானைகளால் விவசாய பயிர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வனத்துறை உரிய இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us