/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
/
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
ADDED : ஏப் 06, 2025 09:35 PM
கூடலுார்; முதுமலை புலிகள் காப்பகம், முதுமலை வனச்சரகம் ஆரகல்வயல் பகுதியில், வன ஊழியர்கள் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அழுகிய நிலையில் காட்டு யானை இறந்து கிடப்பதாக, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
முதுமலை துணை இயக்குனர் வித்யா மற்றும் அதிகாரிகள் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில்,'இறந்த பெண் யானைக்கு, 50 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக இறந்திருக்கலாம். அதன் உடலிலிருந்து, சேகரிக்கப்பட்ட மாதிரிகள், ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படும். உயிரிழப்புக்கு வேறு காரணம் இருப்பின் பரிசோதனை முடிவு கிடைத்த பின் தெரிய வரும்,' என்றனர்.