/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானை பலி; வனத்துறை விசாரணை
/
காட்டு யானை பலி; வனத்துறை விசாரணை
ADDED : அக் 15, 2024 09:56 PM
கூடலுார் : முதுமலை, மசினகுடி சீகூர் வனப்பகுதியில் காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதுமலை, மசினகுடி கோட்டம் சீகூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட, ஜவுளிக்கடவு வனப்பகுதியில் வன ஊழியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆண் காட்டு யானை காயங்களுடன் இறந்து கிடப்பது தெரிய வந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் தயானந்தன் அதன் உடலை ஆய்வு செய்தனர்.
முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண்காட்டு யானைக்கு, 23 வயது இருக்கும். மற்றொரு ஆண் யானையுடன் ஏற்பட்ட மோதலில், இதன் உடலில் காயங்கள் ஏற்பட்டு எலும்புகளும் உடைந்துள்ளது. இதன் காரணமாக யானை உயிரிழந்தது,' என்றனர்.