sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்; டிரோன் கேமரா உதவியுடன் விரட்டும் பணி

/

ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்; டிரோன் கேமரா உதவியுடன் விரட்டும் பணி

ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்; டிரோன் கேமரா உதவியுடன் விரட்டும் பணி

ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்; டிரோன் கேமரா உதவியுடன் விரட்டும் பணி


ADDED : ஆக 15, 2025 08:37 PM

Google News

ADDED : ஆக 15, 2025 08:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார், குங்கூர்மூலா பகுதியில் வழி தவறி வந்த இரண்டு காட்டு யானைகளை, டிரோன் கேமரா உதவியுடன் வனத்துக்குள் விரட்டினர்.

கூடலுார், ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில் இரவு நேரத்தில், இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டன. இவைகள் கொரவயல் வழியாக குங்கூர்மூலா குடியிருப்பு பகுதியில் முகாமிட்டது. தகவல் அறிந்த அச்சமடைந்த மக்கள் பணிக்கு செல்லவில்லை.

வனத்துறையினர், அவைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானை சாலை மற்றும் குடியிருப்புக்குள் நுழையும் ஆபத்து இருந்ததால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, டிரோன் கேமரா பயன்படுத்தி, அதிலிருந்து ஒலி எழுப்பி யானைகளை அம்பலமூலா வழியாக முதுமலை வனப்பகுதிக்கு விரட்டினர்.

மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில், இரவு நேரங்களில், காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு செல்கிறது. தற்போது பகல் நேரத்தில் ஊருக்குள் வர துவங்கி உள்ளது. இவைகளால் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வனத்துறையினர், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us