sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கானுயிர் பாதுகாப்பு தினம்; பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு

/

கானுயிர் பாதுகாப்பு தினம்; பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு

கானுயிர் பாதுகாப்பு தினம்; பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு

கானுயிர் பாதுகாப்பு தினம்; பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு


ADDED : டிச 10, 2024 11:20 PM

Google News

ADDED : டிச 10, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி ; கோத்தகிரி கேர்பெட்டா அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உலக கானுயிர் பாதுகாப்பு தினத்தை ஒட்டி, சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

மனித குலம் தோன்றிய நாளில் இருந்து, வன விலங்குகளை அழிப்பதே அவர்களுடைய வாழ்க்கை முறையாக இருந்து வந்துள்ளது. தற்போது, உலகில் உள்ள உயிரினங்களில், 10 சதவீதம் வனவிலங்குகள் மட்டுமே உள்ளன.

மனிதர்களால், தங்கள் தேவைக்காக வளர்க்கப்பட்ட ஆடு, மாடு போன்ற வளர்ப்பு உயிரினங்கள், 70 சதவீதம் உள்ளன. யானைகளின் தந்தம், புலிகளின் பற்கள் மற்றும் எலும்புகளுக்காக, சீன மருத்துவத்திற்கு பெருமளவில் கொல்லப்படுகிறது. நீண்ட நாள் வாழக்கூடிய, கடல் ஆமைகளும், உலக அளவில் பேரழிவை சந்தித்து வருகின்றன. மீன்கள், 90 சதவீதம் மனிதர்களால் அழிக்கப்பட்டுள்ளன. இது போன்ற பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இது, பாதுகாக்கப்பட வேண்டும்.

பூமியையும் மக்களையும் இனணக்க கானுயிர் பாதுகாப்பில் டிஜிட்டல் பயன்பாடு முக்கியம். காடுகளை அழிப்பதன் மூலம், வன விலங்குகளின் வாழ்வாதாரமும், வாழிடமும் அழிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us