/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி கர்நாடகா பூங்காவில் குளிர்கால மலர் கண்காட்சி
/
ஊட்டி கர்நாடகா பூங்காவில் குளிர்கால மலர் கண்காட்சி
ஊட்டி கர்நாடகா பூங்காவில் குளிர்கால மலர் கண்காட்சி
ஊட்டி கர்நாடகா பூங்காவில் குளிர்கால மலர் கண்காட்சி
ADDED : டிச 12, 2024 06:52 AM

ஊட்டி: கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிநாடு சுற்றுலா பயணியர், ஊட்டிக்கு அதிக அளவில் வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக, 35 லட்சம் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
இவர்கள், ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவை பார்வையிட்ட பின், பர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்காவையும் பார்வையிடுகின்றனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணியரை கவர்வதற்காக, கர்நாடகா பூங்காவில் நடப்பாண்டு முதல் முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
கர்நாடக பூங்கா சுற்றுலா பயணியருக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது. புகைப்பட கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மகிழ்ச்சி தரும் இடமாக அமைந்துள்ளது.
இங்கு சுற்றுலா பயணியரை கவரும் வகையில் 'ஆர்கிட் சைக்ளோமன், ரெனன் குலஸ், உட்பட200 ரகங்களில் 5 லட்சம் மலர்கள் தயார் செய்யும் பணி நடக்கிறது.
இம்மாத இறுதி வாரத்தில் குளிர்கால மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதில், கர்நாடகா மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

