/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு செடிகள் அகற்றும் பணி துவக்கம்
/
காட்டு செடிகள் அகற்றும் பணி துவக்கம்
ADDED : பிப் 28, 2026 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரி அரசு மேல் நிலைப்பள்ளியில், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் காட்டு செடிகள் ஆக்கிரமித்து இருந்தன.
இதனால், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் முகாமிட்டன. சிசிடிவி கேமராக்களில் பதிவாகி வந்து நிலையில், காட்டு செடிகளை அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.
மேலும், எதிர்வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு இந்த பள்ளி மையமாக உள்ளதால், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத வர உள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த இரு நாட்களாக பொக்லைன் எந்திரம் மூலம், காட்டு செடிகள் அகற்றப்பட்டு வருகிறது.

