ADDED : ஜன 25, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர் : நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 127வது பிறந்தநாள் விழா கெம்பநாயக்கன்பாளையத்தில், நேதாஜி அறக்கட்டளை சார்பில், கொண்டாடப்பட்டது. விழாவில் நேதாஜி படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, சுதந்திரப் போராட்ட காலத்தில், நேதாஜியின் சாதனைகளை தெரிவித்தனர்.
விழாவில், 700 நாற்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மரம் வளர்த்தால், மழை வளம் மழை பெறலாம்.
எனவே வாய்ப்புள்ள இடங்களில் நாற்றுக்களை நட்டு பராமரிக்க வேண்டும் என நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.
நிகழ்ச்சியில், அறக்கட்டளை தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சரவணன், உள்பட பலர் பங்கேற்றனர்.