/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
தி.மு.க., - எம்.எல்.ஏ., அராஜகம்: கலெக்டரிடம் ஐ.ஜே.கே., புகார்
/
தி.மு.க., - எம்.எல்.ஏ., அராஜகம்: கலெக்டரிடம் ஐ.ஜே.கே., புகார்
தி.மு.க., - எம்.எல்.ஏ., அராஜகம்: கலெக்டரிடம் ஐ.ஜே.கே., புகார்
தி.மு.க., - எம்.எல்.ஏ., அராஜகம்: கலெக்டரிடம் ஐ.ஜே.கே., புகார்
ADDED : ஏப் 04, 2024 04:44 PM
பெரம்பலுார் : சோதனை என்ற பெயரில் மிரட்டல் விடுத்ததாக, முசிறி தி.மு.க., - எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலுார் கலெக்டர் கற்பகத்திடம், ஐ.ஜே.கே., தலைமை நிலைய செயலர் வரதராஜன் நேற்று புகார் மனு கொடுத்தார்.
மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
முசிறி சட்டசபைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக உள்ளேன். தொட்டியத்தில் லாட்ஜில் தங்கி இருந்தேன். என்னை முசிறி டி.எஸ்.பி., யாஸ்மின் தலைமையில் தேர்தல் அதிகாரிகள், முசிறி தி.மு.க., - எம்.எல்.ஏ., காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் என் அறைக்குள் நுழைந்தனர். அங்கிருந்தோரை மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். அந்த லாட்ஜில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து, தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

