ADDED : பிப் 26, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், ஓதியம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 55, இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம், ஆபாச வார்த்தைகளை பேசி, பணம் தருவதாக கூறியதாக தெரிகிறது.
சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் போலீசில் புகார் செய்தனர். மங்கலமேடு அனைத்து மகளிர் போலீசார், முத்துசாமி மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.