sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

பள்ளி வேனில் சிக்கி 2 வயது சிறுவன் பலி

/

பள்ளி வேனில் சிக்கி 2 வயது சிறுவன் பலி

பள்ளி வேனில் சிக்கி 2 வயது சிறுவன் பலி

பள்ளி வேனில் சிக்கி 2 வயது சிறுவன் பலி


ADDED : டிச 15, 2024 09:59 AM

Google News

ADDED : டிச 15, 2024 09:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டம், பசும்பலுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிங்காரவேல்- - சந்தியா தம்பதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.

இவர்களது முதல் குழந்தை விசித்ரா, 5, வி.களத்துார் ஐடியல் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்.

சந்தியா நேற்று காலை 8:45 மணிக்கு விசித்ராவை பள்ளிக்கு சொந்தமான மேக்சி கேப் வேனில் வழி அனுப்ப, தன் இரண் டாவது குழந்தை சண்முகவேல், 2, உடன் அழைத்து சென்றார்.

அப்போது, கவனக்குறைவாக சந்தியா, தன் மகன் சண்முகவேலை கீழே இறக்கிவிட்டார்.

இதை கவனிக்காமல் வேனை டிரைவர் சுதாகர், 28, என்பவர் ஓட்டினார்.

இதில், இடது பக்க முன் சக்கரத்தில் குழந்தை சண்முகவேல் சிக்கி படுகாயமடைந்தான்.

சிறுவனை மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சிறுவன் இறந்தார்.

இதுகுறித்து, வி.களத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us