sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

கடப்பாறையால் தாக்கி 37 சவரன் கொள்ளை

/

கடப்பாறையால் தாக்கி 37 சவரன் கொள்ளை

கடப்பாறையால் தாக்கி 37 சவரன் கொள்ளை

கடப்பாறையால் தாக்கி 37 சவரன் கொள்ளை


ADDED : மார் 13, 2026 10:28 PM

Google News

ADDED : மார் 13, 2026 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, மூதாட்டியை கடப்பாறையால் தாக்கி 37 சவரன் தங்க நகை மற்றும் 12,000 ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை மங்கலமேடு போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தாராபீ, 65, இவர், நேற்று முன்தினம் இரவு அவரது மெத்தை வீட்டில் தன் மகள் அஷரப்பீ, 29, என்பவருடன் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவை இரும்பு ராடு மூலம் தகர்த்து உள்ளே புகுந்த, முகமுடி அணிந்திருந்த கொள்ளையர்கள் நான்கு பேர் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி, கடப்பாறை மற்றும் கட்டையால் தாக்கி, வீட்டில் பிரோவில் இருந்த 37 சவரன் தங்க நகைகளையும், 12,000 ரூபாயை கொள்ளையடித்துக் தலைமறைவாகினர். தகவலறிந்த மங்கலமேடு போலீசார் வழக்கு பதிந்து, முகமுடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us