sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

பெற்ற மகளை சீரழித்த தந்தைக்கு '40 ஆண்டு'

/

பெற்ற மகளை சீரழித்த தந்தைக்கு '40 ஆண்டு'

பெற்ற மகளை சீரழித்த தந்தைக்கு '40 ஆண்டு'

பெற்ற மகளை சீரழித்த தந்தைக்கு '40 ஆண்டு'


ADDED : ஆக 02, 2024 11:59 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், அய்யலுார் கிராமத்தை சேர்ந்தவர் 43 வயது சமையல் மாஸ்டர். இவரது மனைவி தகராறு செய்து கொண்டு, சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 2022 மார்ச் 13ம் தேதி, வீட்டில் இருந்த தன், 13 வயது மகளை, அவர் தொடர்ந்து நான்கு நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த கொடூரத்தை அந்த சிறுமி தன் தாய்க்கு தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த தாய், பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை மீது வழக்கு பதிந்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பெரம்பலுார் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி இந்திராணி, காமுக தந்தைக்கு 40 ஆண்டு சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us