sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

 நகை கடையில் கொள்ளை முயற்சி: திண்டிவனத்தில் 5 பேர் கைது

/

 நகை கடையில் கொள்ளை முயற்சி: திண்டிவனத்தில் 5 பேர் கைது

 நகை கடையில் கொள்ளை முயற்சி: திண்டிவனத்தில் 5 பேர் கைது

 நகை கடையில் கொள்ளை முயற்சி: திண்டிவனத்தில் 5 பேர் கைது


ADDED : நவ 20, 2025 06:04 AM

Google News

ADDED : நவ 20, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: பெரம்பலுார் அருகே நகைக்கடையில் கொள்ளை முயிற்சியில் ஈடுபட்ட 5 பேரை திண்டிவனத்தில் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், பாடாலுாரில் தமிழரசன் என்பவருக்கு சொந்தமா ன நகைக்கடை உள்ளது. கடந்த 13ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்றனர். அப்போது நள்ளிரவில், முகமூடி அணிந்த 5 பேர் காரில் வந்து, கடை காவலாளி ஜெயராமன் கட்டிப்போட்டுவிட்டு, நகைக்கடையின் பூட்டை உடைத்தனர். கடையிலிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், கொள்ளை கும்பல், காரில் தப்பிச்சென்றது.

இச்சம்பவம் குறித்து பாடாலுார் போலீசார் வழக்கு பதிந்து, கடையில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையர்கள் தப்பிச்சென்ற காரின் பதிவு எண்ணை (டிஎன்.02சி.7985) வைத்து, இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், திண்டிவனம்-சென்னை சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் காலை, கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் நின்றிருந்தது.

கா ரில் யாரும் இல்லாததால், தனிப்படை போலீசார் துாரத்தில் இருந்தபடி கண்காணித்தனர். அப்போது, 5 பேர் அந்த கார் அருகே வந்தனர். அவர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில், நகைக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள், செஞ்சி, சோகுப்பத்தை சேர்ந்த வீரமுத்து மகன் கண்ணதாசன், 29; துரைசாமி மகன் முருகன், 29; பெரியார்குப்பத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் முருகன், 34; திருவண்ணாமலை, வேங்கிக்காலை சேர்ந்த சிவா மகன் ரஞ்சித்குமார், 20; கவுரிசங்கர் மகன் ஸ்ரீராம்,20; ஆகியோர் என, தெரிந்தது.

அவர்களை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us