sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

வெள்ளாடு திருடர்களுக்கு வலை

/

வெள்ளாடு திருடர்களுக்கு வலை

வெள்ளாடு திருடர்களுக்கு வலை

வெள்ளாடு திருடர்களுக்கு வலை


ADDED : ஏப் 19, 2025 02:17 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:பட்டியில் அடைக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளாடுகளை திருடி சென்றவர்களை மங்கலமேடு போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், கத்தாழைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, 55; விவசாயியான இவர், 68 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் மேய்ச்சலுக்கு பின்னர், வயலில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை, மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதற்காக கருப்பையா பட்டிக்கு வந்தபோது, ஆடுகள் திருடு போனது தெரியவந்தது. தான் வளர்த்து வந்த அனைத்து ஆடுகளும் திருடு போனதால் விவசாயி கருப்பையா வேதனையடைந்தார். கருப்பையா புகாரில், மங்கலமேடு போலீசார் ஆடு திருடர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us