sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

லாரியில் மணல் கடத்திய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

/

லாரியில் மணல் கடத்திய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

லாரியில் மணல் கடத்திய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

லாரியில் மணல் கடத்திய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு


ADDED : ஜூலை 12, 2025 08:00 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 08:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாடாலுார்:பெரம்பலுார் அருகே மணல் கடத்திய தி.மு.க., மாவட்ட நிர்வாகி உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், மருதையாற்றில் இருந்து, அனுமதியின்றி லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக, ஆலத்துார் தாசில்தாருக்கு தகவல் வந்தது. புஜங்கராயநல்லுார் அருகே, மருதையாற்றில் கிராம உதவியாளர் ஒருவர் சோதனையில் ஈடுபட்டார். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்திய போது, மருதையாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்திருப்பது தெரிய வந்தது.

இது பற்றி, கிராம உதவியாளர், வருவாய்த்துறை அதிகாரிகள், குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதிகாரிகள் மற்றும் போலீசார் வருவதற்குள், கிராம உதவியாளரை பொருட்படுத்தாமல், டிரைவர் லாரியை எடுத்துச் சென்று விட்டார். லாரியின் பின்னால் பைக்கில் வந்த ஒருவரும் தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் கிருத்திகா, குன்னம் போலீசில் அளித்த புகார்படி, புஜங்கராயநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க., மாவட்ட நிர்வாகி காட்டுராஜா உட்பட, நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us