ADDED : பிப் 16, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணியாற்றுபவரின் மனைவியை ஆயுதப்படை போலீஸ்காரரான பிரபாகரன் 31 என்பவர் பிப்.,12ம் தேதி இரவு குடிபோதையில் பலாத்கார நோக்கத்துடன் துாக்கிச் செல்ல முயன்றார். போலீசார் பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து பெரம்பலுார் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி உத்தரவிட்டார். இதுதொடர்பாக நீதிமன்ற விசாரணையும் துறை ரீதியான விசாரணையும் நடக்க உள்ளது.