sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

பா.ஜ., நிர்வாகிகள் கைது பெரம்பலுாரில் ஆர்ப்பாட்டம்

/

பா.ஜ., நிர்வாகிகள் கைது பெரம்பலுாரில் ஆர்ப்பாட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் கைது பெரம்பலுாரில் ஆர்ப்பாட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் கைது பெரம்பலுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 20, 2024 01:01 AM

Google News

ADDED : ஜன 20, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:பா.ஜ., மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பெரம்பலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலுார் மாவட்டம், மரவநத்தம் கிராமத்தில், பா.ஜ., சார்பில் கம்பம் அமைத்து, கடந்த 16ம் தேதி, கட்சிக் கொடி ஏற்றும் விழா நடந்தது.

இது, மறைமுகமாக அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக, மரவத்தம் ஆர்.சி., தொடக்கப் பள்ளி நிர்வாகி அகஸ்டின்பீட்டர், போலீசில் புகார் கொடுத்தார். புகார்படி, கொடியேற்று விழாவில் பங்கேற்ற பா.ஜ., பெரம்பலுார் மாவட்ட தலைவர் செல்வராஜ், 45, அவரது மனைவி உமாஹேமாவதி, 40, மற்றும் மரவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகளான கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், 38.

மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன், 30, வெங்கடேஷ், 32, ஆகியோர் மீது வி.களத்துார் போலீசார் 9 பிரிவுகளில் வழக்கு பதிந்து, உமாஹேமாவதியை தவிர மற்ற நான்கு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

பா.ஜ., நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பெரம்பலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள காந்தி சிலை முன், பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, பா.ஜ., பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி தலைமை வகித்தார்.

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ., நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பழிவாங்கும் போக்கில் செயல்படும் வி.களத்துார் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில், பா.ஜ.,வை சேர்ந்த திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us