sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

பெரம்பலுாரில் விவசாயிகள் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்

/

பெரம்பலுாரில் விவசாயிகள் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்

பெரம்பலுாரில் விவசாயிகள் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்

பெரம்பலுாரில் விவசாயிகள் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 22, 2024 02:12 AM

Google News

ADDED : டிச 22, 2024 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 40வது ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு சங்கத்தின் மாநில செயலர் ராஜாசிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்க வேண்டும்; வீட்டு மின் இணைப்புக்கு மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்.

பெரம்பலுார் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த மக்காச்சோளம், பருத்தி.

சின்னவெங்காயம், மரவள்ளி கிழங்கு, நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு முறையாக கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், விவசாயிகள் முக்காடு போட்டும், மழையால் சேதமடைந்த பயிர்களை மாலையாக அணிந்தும், நேற்று நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us