sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

மனைவியை கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை

/

மனைவியை கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை

மனைவியை கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை

மனைவியை கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூலை 25, 2011 01:59 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (45).

இவரது மனைவி காவேரி (43). இவர்களுக்கு நிசாந்தி (13), பாப்பாத்தி (12), அஜீத் (5) என மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும், நேற்று மதியம் ஒரு மணியளவில் விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றனர். அங்கு கணவன், மனைவியிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்து, காவேரியை கழுத்தை அறுத்து கொலை விட்டு, அங்குள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து, பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார். மனைவியை கொலை செய்துவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








      Dinamalar
      Follow us