sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

/

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


ADDED : ஆக 09, 2011 02:20 AM

Google News

ADDED : ஆக 09, 2011 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தை சேர்ந்த செல்லப்பிள்ளை மகன் இளையராஜா (19). இவருக்கும், குன்னம் அருகே உள்ள வெண்மணி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகள் பகவதி (18) என்பவருக்கும் கடந்த மூன்று மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.திருமணமான நாளிலிருந்து இளையராஜாவுக்கும், பகவதிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 6ம் தேதி இளையராஜா மது குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டு வந்ததார். அப்போது பகவதி, இளையராஜாவை திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த இளையராஜா பூச்சி மருந்து குடித்து விட்டு, பெரம்பலூர் ஐயப்பன் கோவில் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார்.தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மயங்கி கிடந்த இளையராஜாவை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின் மேல்சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us